×

தோட்டக்குறிச்சி பாதை வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டு வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

கரூர், மே.21: கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் இருந்து அய்யம்பாளையம் வரை செல்லும் வளைவு பாதையில் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்திட பேரிகார்டு வைக்க வேண்டும். கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் இருந்து அய்யம்பாளையம், தளவாபாளையம் ஆகிய பகுதிகள் வரை சாலையின் சில இடங்களில் ஆபத்தான வளைவு பாதை உள்ளது.  முக்கிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த சாலையில், தினமும் ஏராளமான பேரூந்துகளும், நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. கரூரில் இருந்து வேலூர், புகளூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாக செல்கிறது. இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள ஆபத்தான வளைவில் அடிக்கடி வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனை கட்டுப்படுத்தும் வகையில், வளைவு பாதையின் அருகே பேரிகார்டு வைக்க தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என  வாகனஓட்டிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : motorcars ,Gregory ,grocery trail ,
× RELATED தொடர் தோல்வி எதிரொலி,..சென்னை எப்சி...