×

தொழிலாளி தற்கொலை

திருபுவனை, மே 21: திருபுவனை அருகே உள்ள பி.எஸ்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் அழகேசன்(60), கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனசெல்வி, மகன் விமல்சர்மா. சம்பவத்தன்று சென்னையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக விமல்சர்மா மற்றும் உறவினர்கள் புறப்பட்டனர். அழகேசன் குடித்துவிட்டு இருந்ததால் அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர். தன்னை அழைத்து செல்லாததால் மனமுடைந்த அழகேசன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருபுவனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...