×

தனித்தனி சம்பவத்தில் 2 பேர் தற்கொலை

விருத்தாசலம், மே 21: விருத்தாசலம் அண்ணா நகரை சேர்ந்தவர் பாரதிராஜா (60). இவருக்கு தீராத வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. பல மருத்துவ
மனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பாரதிராஜா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பாரதிராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மாளிகைமேடு ஏரிப்பாளையத்தை சேர்ந்தவர் வீரப்பன்(52). திமுக பிரமுகர். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. வயிற்றுவலி காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமாகவில்லை. இதனால் வீட்டில் யாருமில்லாதபோது தனக்குத்தானே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துகொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கஸ்தூரி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : suicides ,incidents ,
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...