×

புதுகும்மிடிப்பூண்டி ஆஞ்சநேயர் கோயிலில் மகோற்சவம்

கும்மிடிப்பூண்டி, மே 21: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலில்  64ம் ஆண்டு மகோற்சவ விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 14ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது.  இதைத்தொடர்ந்து அபிஷேக ஆராதனை, அர்ச்சனை, தீர்த்த பிரசாத விநியோகம், வடமாலை சாற்றுதல், வெண்ணை காப்பு சாற்றுதல், மலர் அலங்காரம் நடந்தது. வெள்ளிக்கிழமை மகா அர்ச்சனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல், சீதாராமர் திருக்கல்யாண திருமாங்கல்ய சரசு வழங்குதல் நடந்தது.

சீதாராமர் திருக்கல்யாணம், பேண்டு வாத்தியம், வானவேடிக்கை, நித்ய பஜனை, பண்டரி பஜனை நடந்தது. இதையடுத்து, ராமர், லட்சுமணர், சீதாதேவி மற்றும் பிரசன்ன ஆஞ்சநேயர் சாமிகளின் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பகுதி மக்கள் செய்திருந்தனர்.

Tags : Pongamidippotti Anjaneya ,
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...