×

அரிசி கடை ஊழியர் மயங்கி விழுந்து சாவு

ஆறுமுகநேரி, மே 19: ஆறுமுகநேரி அருகே மூலக்கரை வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராமஜெயம்.  இவருக்கு தங்கபுஷ்பம் என்ற மனைவியும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.  ஒரு ஆண்டுக்கு முன்பு ராமஜெயம் இறந்துவிட்டார்.  இவர்களது இளைய  மகன் சக்திகுமார்(26),  சென்னையில் அரிசி கடையில் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் மூலக்கரைக்கு கொடைவிழாவிற்கு வந்துள்ளார்.  சம்பவத்தன்று வீட்டில் இருந்த சக்திகுமார், வாந்தி வருவது போன்று  உள்ளதாக  தாயாரிடம் கூறியுள்ளார்.  அவர் அருகில் உள்ள கடையில் எலுமிச்சை பழம் வாங்கி வர சென்றார். வீட்டிற்கு வந்தபோது மகன் சக்திகுமார் அசைவற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகநேரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் உடலை கைப்பற்றி காயல்பட்டினம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காவலர் கல்பனா வழக்கு பதிவு செய்தார். எஸ்ஐ சுந்தரமூர்த்தி விசாரணை செய்து வருகிறார்.

Tags : Rice ,shop employee ,
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்