×

கடனாநதி அணை கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு

கடையம், மே 19:  கடையம் அருகே கடனா நதி அணைப் பகுதியில் உள்ள  அனுசுயா பரமேஷ்வரி உடனுறை அத்ரி பரமேஸ்வர சாமி கோரக்கநாதர் கோயிலில் பவுர்ணமி, ஆடி அமாவாசை, பிரதோஷம், வைகாசி விசாகம் உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் நெல்லை, தென்காசி, ராஜபாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Pournami ,Krishna ,
× RELATED மூச்சை அடக்கினால் மனது அடங்கும்