×

மூதாட்டி வீட்டை சேதப்படுத்திய வாலிபர் கைது

மணவாளக்குறிச்சி, மே 19: வெள்ளிச்சந்தை அருகே பெரும்செல்வவிளையை சேர்ந்தவர் வேலப்பன். இவரது மனைவி நாகேஸ்வரி (59). அதே பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (35). இவர் நாகேஸ்வரிக்கு உறவு முறையில் பேரன் ஆவார். சம்பவத்தன்று அனீஸ் நாகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை காலி செய்யுமாறு கூறி உள்ளார். பின்னர் வீட்டு ஓட்டுக்ககூரை மற்றும் கதவை உடைத்து சேதப்படுத்தி நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நாகேஸ்வரி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அனீசை கைது செய்தனர்.

Tags : house ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை