×

வாலிபர், மூதாட்டி தற்கொலை

களியக்காவிளை, மே 19:  களியக்காவிளை அடுத்த அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் ஸ்டாலின்(33). இவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. வேலைக்கு போய்விட்டு தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் ஸ்டாலின் கடந்த ஒருவாரமாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு விஷம் அருந்திவிட்டு படுத்துள்ளார். நேற்று அதிகாலை வெகு நேரமாகியும் மகன் எழும்பாததால் தந்தை சிவலிங்கம் அவரை எழுப்ப முயன்றுள்ளார். அப்போது ஸ்டாலின் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உறவினர்கள் உதவியுடன் அவரை திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பரிசோதித்த டாக்டர்கள் ஸ்டாலின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். * களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன் மனைவி அன்னம்மாள்(62) இவருக்கு ஒரு மகன் உண்டு. அன்னம்மாள் உடல்நலகுறைவால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அடிக்கடி உடல் பலவீனம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சிலநாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து விட்டு கட்டிலில் படுத்துள்ளார். அன்று இரவு மகன் ராஜ் பார்த்தபோது தாயார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு நெய்யாற்றின்கரையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்னம்மாள் இறந்தார். ராஜ் களியக்காவிளை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை