×

மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கூலி தொழிலாளி தற்கொலை

திருப்பூர்,மே19:திருப்பூர், நல்லூரை அடுத்த லட்சுமி நகர், 4வது வீதியை சேர்ந்தவர் முருகன் (52). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயசீலி(42). தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதுபோதையில் வீட்டுக்கு வந்த முருகன் மகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதன்பின்னர், அவரது மனைவி வீட்டின் கதவை தாழிட்டு தூங்க சென்றார். இதனால் முருகன் வீட்டின் வராண்டாவில் படுத்தார். காலையில் ஜெயசீலி கதவை திறந்து வெளியே வந்து பார்த்த போது, முருகன் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருந்தது தெரிய வந்தது. தகவலறிந்த ரூரல் போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...