×

சோழவந்தான் அருகே தலையாரிக்கு கத்திக் குத்து 3 பேருக்கு வலை

சோழவந்தான், மே 19: சோழவந்தான் அருகே முன்விரோதத்தில் தலையாரிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார் (34). இவர் நீரேத்தான் கிராம தலையாரியாக பணிபுரிகிறார். இவருக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த சிவா (32) என்பருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முள்ளிப்பள்ளத்தில் சிவா, பழனிக்குமாரை கத்தியால் கை, கால். கழுத்து பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். காயமடைந்த பழனிகுமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான சிவா மற்றும் அவரது தந்தை ரவி, சகோதரர் குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Thalaiyar ,Cholavanan ,
× RELATED மூணாறு அருகே பாம்பாறு மரப்பாலம்...