×

மானாமதுரையில் கார் மோதி காவலாளி பலி

மானாமதுரை, மே 19: நான்குவழிச்சாலையை கடக்க முயன்ற காவலாளி கார் மோதி பலியானார். மானாமதுரை கேப்பர்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ்(60). இவர் புதுபஸ்ஸ்டாண்டு அருகே உள்ள தனியார் கடையில் காவலாளியாக பணிபுரிந்தார். நேற்று அதிகாலை புதுபஸ்ஸ்டாண்டில் உள்ள டீக்கடையில் டீகுடித்துவிட்டு மீண்டும் தான் வேலை பார்க்கும் கடைக்கு செல்வதற்காக சைக்கிளில் மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து கார் டிரைவர் நாமக்கல் டவுனை சேர்ந்த பாண்டியை(36) கைது செய்தனர்.

Tags : policeman ,Manamadurai ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...