×

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி

தேவதானப்பட்டி, மே 19:  தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தில் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும் போது மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து பலியானார். குள்ளப்புரம் மேலத்தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி பார்வதி(60). இவர் நேற்று முன்தினம் மாலை அவரது தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சும் போது தவறி கிணற்றில் விழுந்து விட்டார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்க்கும் போது பார்வதி இறந்து விட்டார். பெரியகுளம் தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்டனர். ஜெயமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags : murderer ,well ,
× RELATED “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை...