×

இலுப்பூர் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

இலுப்பூர், மே19:  இலுப்பூரில் உள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்  நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இலுப்பூரில் அலர்மேல் மங்கை சமேத கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது.இக்கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்ஸவ திருவிழா கடந்த 10 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா துவங்கிய நாள் முதல் தினமும் காலை மாலை இருவேளையும் சுவாமி பல்வேறு  வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில்  தேரோடும் திருவீதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் மற்றொரு நிகழ்சியான பெருமாள் தாயார் திருக்கல்யாண வைபவத்தை முன்னி–்ட்டு  சீர் வரிசை கொண்டு வரப்பட்டு  கடந்த 16ம் தேதி திருக்கல்யாணம்  நடைபெற்றது. நேற்று முன் தினம் வேடுபறி நிகழச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம் நேற்று காலை  நடைபெற்றது. பக்தர்கள்  கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரினை  தேரோடும் வீதிகளில் வடம் பிடித்து இழுத்து  வந்து பின்னர் தேர்நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று  காலை தீர்த்தவாரி மற்றும் மாலை கருட சேவையுடன் விழா நிறைவடைகிறது.

Tags : Lighthouse ,Ilupur Kalyana Venkateswara Perumal ,
× RELATED கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர...