கரூர்,மே19: அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று(19ம்தேதி) நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் வேட்பாளராக மோகன்ராஜ் போட்டியிடுகிறார்.இந்நிலையில் கரூர் வையாபுரி நகர் 3வது கிராஸில் உள்ள வேட்பாளர் அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடைபெறுவதாக பறக்கும் படை குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற குழுவினர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணம் எதுவும் கைப்பற்றப்பட வில்லை எனதெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.