×

மாட்டுவண்டி மீது பைக் மோதல் அதிரடிப்படை போலீசார் பலி

கரூர், மே 19: கரூர் அருகே மாட்டு வண்டி மீது பைக் மோதிய விபத்தில் அதிரடிப்படை போலீசார் பலியானார். கரூர் தொழிற்பேட் டை பகுதியை சேந்தவர் மதன்ராஜ்(27). இவர், ஒகனேக்கல் பகுதியில் உள்ள அதிரடிப்படை பிரிவில் போலீசாராக பணியாற்றி வந்தார். 20 நாட்கள் விடுமுறையில் கடந்த 16ம்தேதி கரூர் வந்த மதன்ராஜ், நேற்று அதிகாலை 1மணியளவில், நெரூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். கரூர் மாவட்டம் ஒத்தக்கடை அருகே சென்ற போது, எதிரே வந்த மாட்டு வண்டி மீது பைக் மோதியது. இதில், படுகாயமடைந்த மதன்ராஜ், ஆபத்தான நிலையில், கரூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.இந்த விபத்து சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike fighting ,police force ,
× RELATED என்.எஸ்.ஜி. தலைவராக நளின் பிரபாத் நியமனம்