×

காட்டுயானைகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு கேரள அமைச்சர் ஆறுதல்

மூணாறு,மே 17: மூணாறு அருகே காட்டுயானைகள் தாக்கி உயிரிழந்த கிருஷ்ணன் குடும்பத்திற்கு கேரள மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணி நேரில் சென்று ஆறுதல் கூறினார். மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் ஆதிவாசி குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணன் மே 12ம் தேதி இஞ்சி பயிரிடுவதற்காக சென்றார் அப்போது இரண்டு காட்டுயானைகள் அவரை தலையில் மிதித்து கொன்றன. யானையின் சத்தத்தை கேட்ட அப்பகுதி பொதுமக்கள், அவற்றை விரட்டி கிருஷ்ணனின் உடலை மீட்டனர்.
இந்நிலையில் கேரளா மின்சாரத்துறை அமைச்சர் எம்.எம் மணி, யானை தாக்கி உயிரிழந்த கிருஷ்ணனின் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் சென்று ஆறுதல் கூறினார். மேலும் இந்த சம்பவத்தை கேரள அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று காட்டு யானைகள்
தாக்குதலில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். மார்க்சிஸ்ட் கட்சி சந்தன்பாறை ஏறிய செயலாளர் வி.சுனில்குமார் மற்றும் சேனாபதி சசி உடனிருந்தனர்

Tags : Minister ,Kerala ,victims ,
× RELATED கேரள மாஜி அமைச்சரை விசாரிக்க மனு அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம்