×

ேதனியில் கிணற்றில் தவறி விழுந்து போதை வாலிபர் பலி

தேனி, மே 17: தேனியில் மது போதையில் கிணற்றின் மீது அமர்ந்திருந்த போதை வாலிபர், தவறி விழுந்து உயிரிழந்தார். தேனி அல்லிநகரத்தில் உள்ள தியேட்டர் ரோட்டில் வசித்தவர் வீரக்குமார்(26). வெல்டிங் தொழில் செய்து வந்த இவர், நேற்று தேனியில் மின்தடை என்பதால், தனது நண்பர்கள் முனியாண்டி, ராஜேஷ்கண்ணன், ராஜா ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார்.பின்னர் பூதிப்புரம் டாஸ்மாக் கடைக்கு எதிரே தோட்டப்பகுதிக்குள் சென்றனர், அங்கு வீரக்குமார் 100 அடி ஆழமுள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் மீது அமர்ந்திருந்தார். அப்போது போதையில் திடீரென தடுமாறி கிணற்றுக்குள் உள்ளே விழுந்து இறந்து விட்டார். தேனி தீயணைப்பு படையினர் வீரக்குமார் உடலை மீட்டனர். இவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : teenager ,
× RELATED ஐதராபாத் வாலிபர் ரஷ்யாவில் மரணம்