×

வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் முட்புதரில் முதியவர் மர்மச்சாவு

வேடசந்தூர், மே 17: வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வேடசந்தூர் ஆத்துமேடு கொங்குநகரில் வசித்தவர் பழனிச்சாமி (65). இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவர் பின்னர் வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கடந்த 4 நான்கு நாளுக்கு முன்பு வேடசந்தூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் கொடுத்து உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள செங்குளத்தில் முட்புதர் பகுதியில் இறந்து உடல் முழுவதும் அழுகிய நிலையில் பழனிச்சாமி கிடந்தார். இதுகுறித்து அப்பகுதியினர் வேடசந்தூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் முதியவர் பழனிச்சாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : thirties ,Vedasandur Audumedu ,area ,
× RELATED வாட்டி வதைக்கும்...