×

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி யாக பூஜை

சாத்தூர், மே 17: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், மழை வேண்டி வருணஜப யாகம் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. யாகத்தை பாளையம் கோட்டை ஆறுமுகம் சிவாச்சாரியார் செய்தார். அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தயிர் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுவை சேர்ந்த ராமமூர்த்தி பூசாரி தலைமையில் செயல் அலுவலர் கருணாகரன் முன்னிலையில் யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவல்குழு பூசாரிகள், கோயில் பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டர்.

Tags : Pooja ,Mariamman ,
× RELATED வேதாள முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்