×

வல்லநாடு பகுதியில் பிரசாரம் மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள்

செய்துங்கநல்லூர், மே 17:  வல்லநாடு பகுதியில் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன், மக்கள் பணியாற்றிட மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என உருக்கமாக பேசினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன், நேற்று கருங்குளம் ஒன்றிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். வல்லநாடு, ஈச்சந்தா ஓடை, சேதுராமலிங்கபுரம், நாணல்காட்டான் குளம், கோனார்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று பரிசுப்பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது: இந்த பகுதியில் சாலைகளை சீரமைத்திடவும், குக்கிராமங்களில் உள்ள அனைத்து தெருக்களை சீர்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வந்தேன். ஆனால் அதற்குள் எம்எல்ஏ பதவியை பறித்துவிட்டனர். மக்கள் சேவை செய்ய வந்த என்னை பழிவாங்கி கைகளை கட்டிப்போட்டனர். அதனால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

இந்த தேர்தலில் எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். நான் விட்ட பணிகளை துவக்க ஆணையிடுங்கள். இவ்வாறு பேசினார். பிரசாரத்தில் கருங்குளம் ஒன்றிய செலயாளர் சிவசுப்பிரமணியன், கொம்பையா, டாக்டர் கோசல்ராம் மாநில அண்ணா தொழிற்சங்கபேரவை பொருளாளர் நெல்லை பரமசிவன், கோட்ட பொறுப்பாளர் பொன்னுசாமி, ஆவின் அண்ணாசாமி, மண்டல பொறுப்பாளர் பொன்னையா, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : return ,area ,Vallavan ,
× RELATED வாட்டி வதைக்கும்...