×

அவிநாசி அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

அவிநாசி, மே 17: அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில், 22 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற  முன்னாள் மாணவ, மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த பள்ளியில் 1996ம் ஆண்டு படித்த 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேற்று அவிநாசியில் உள்ள அதே பள்ளியில் அதே வகுப்பறையில் ஒன்றாக சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கத்தார், மஸ்கட் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணி புரிபவர்கள் பெங்களூரு, சென்னை, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து, வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், நீதிபதி, தலைமையாசிரியர் ஆக பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் பசுமை நிறைந்த மலரும் நினைவுகளை பாசத்துடன் தங்களது அன்பை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். பின்னர் தாங்கள் படித்த அதே வகுப்பறையில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Tags : Avinashi ,government school meeting ,alumni ,
× RELATED பெண்களை மதிக்க வீடுகளில்...