×

வீடு புகுந்து நகை திருட்டு

செய்துங்கநல்லூர், மே 17:  சேரகுளம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர்  அந்தோணி ராஜ் மகன் சேவியர் ஜான் பிரிட்டோ (39). இவர், இதே பகுதியில் ஷாப்பிங் கடை வைத்துள்ளார். நேற்று நெல்லைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அவரது மனைவி பாலம்மாள் (35), கடையில் இருந்துள்ளார். மகள் ஜெயந்தி (13) மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அவர், பாத்ரூம் சென்ற நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் பீரோவில் இருந்த 20 கிராம் தங்க நகையை எடுத்துக்கொண்டு தப்பியோடி விட்டான். வெளியே வந்து பார்த்த ஜெயந்தி, பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்சியடைந்து தாயாரிடம் சென்று தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது 20 கிராம் தங்க நகை திருட்டு போனது  தெரிய வந்தது. இதுகுறித்து பாலம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சேரகுளம் எஸ்ஐ ராஜா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : House ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை