×

அரசு மருத்துவமனையில் மாயமாகும் காலணிகள்

திருப்பூர், மே 17: திருப்பூர்-தாராபுரம் ரோட்டில் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை  செயல்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு வியாதிகளுக்கு  தனித்தனியாக வார்டுகள் இயங்கி வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர்  பகுதிகளில் ஏழை, எளிய தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் மாவட்ட  தலைமை அரசு மருத்துவ மனையை முழுமையாக நம்பியுள்ளனர்மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டினுள் கர்ப்பிணிகள், குழந்தைகளை பார்க்க வரும் உறவினர்கள் காலணிகளுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலணிகளை வெளியே விட்டுச்செல்கின்றனர்.

இந்த காலணிகளை சிலர் திருடிசெல்வதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவமனை உள்ளே சென்று சில மணி நேரம் கழித்து வெளியே வரும் நோயாளிகளின் உறவினர்கள் தாங்கள் காலணி இல்லாததால் அதிர்ச்சியடைவது வாடிக்கையாக உள்ளது.  இதனால் திருப்பூர் தனியார் தன்னார்வ தொண்டு அமைப்பினர் காலணிகளை வைக்க ஸ்டாண்ட் அமைத்து கொடுக்க முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government hospital ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்