×

கட்சி நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய கோரி விசி கட்சியினர் திடீர் சாலை மறியல் கறம்பக்குடி அருகே பரபரப்பு

கறம்பக்குடி, மே 17: கறம்பக்குடி அருகே ஆட்டியடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாண்டியன். இவர் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விசி துணைச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு எம்பி தொகுதி தேர்தல் பணி சம்பந்தமாக வேலைகளை முடித்துவிட்டு இரவு 8 மணியளவில் தனது பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கறம்பக்குடி அருகே  வடக்கு புதுப்பட்டிகுளம் அருகில் மர்ம நபர்கள் அவர் மீது சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டு சென்றனர். படுகாயமடைந்த சந்திரபாண்டியனை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகியும் இதுநாள் வரை குற்றவாளிகளை கண்டு பிடிக்காத காவல்துைறயை கண்டித்தும்,  தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரி கறம்பக்குடி புதுப்பட்டி சாலையில் விசி கட்சியினர் திரண்டு திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.  அவர்களிடம் ஆலங்குடி டிஎஸ்பி மோகன்தாஸ் மற்றும் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் கழனியப்பன்  ஆகியோர் தலைமையில் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் குற்றவாளிகளை  விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : VC Party ,party administrator ,
× RELATED அரசு அறிவிப்புகளை செயல்படுத்த வலியுறுத்தி வி.சி.கட்சி ஆர்ப்பாட்டம்