×

கணக்கம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை

உடுமலை, மே 17:இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறி இருப்பதாவது: உடுமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு முறையான குடிநீர் விநியோகம் இல்லை. 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது.சாலை வசதிகளும் சரிவர இல்லை. ரங்கநாதர் லே-அவுட், வேலுச்சாமி நகர், குமாரசாமி நகர், சௌபர்ணிகா லேஅவுட் மற்றும் ஊராட்சி பகுதிகளில் இதுவரை சாலை வசதி, தெருவிளக்கு வசதி இல்லை. மேற்கண்ட வசதிகளை செய்து கொடுக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு  அதில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு