×

கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் ஓட்டப்பிடாரத்தில் செயற்கை தேர்தல்

ஒட்டப்பிடாரம் எம்எல்ஏவாக இருந்தவர் கட்சி கட்டுப்பாட்டை மீறியதால் இன்று இடைத்தேர்தல் வந்துள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் புதிய தமிழகம்  கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நடுவக்குறிச்சி, புதூர் பாண்டியாபுரம்  உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், மக்களவைக்கு நடந்த தேர்தல் முறைப்படியாக நடைபெற்ற தேர்தல் என்றும், ஓட்டப்பிடாரம்  தொகுதிக்கு வந்த தேர்தல் செயற்கையான தேர்தல். கட்சி கட்டுப்பாட்டை மீறி  தன்னிச்சையாக சுந்தர்ராஜ் செயல்பட்டதால் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி  நீக்கம் செய்யப்பட்டார். தவறுதலான வழிகாட்டுதல்படி பதவி இழந்தார். நீண்ட  நாள் கோரிக்கையான தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை பட்டியல் பிரிவில்  இருந்து விலக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்  என்ற கோரிக்கைக்கு அரசாணை போட்டு அதற்கு ஒரு குழு அமைத்து மத்திய அரசுக்கு  அறிக்கை செல்லும். அதிமுக வெற்றி பெற்றதும் ஓட்டப்பிடாரம் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும், என்றார்.

Tags : Ottapidaram ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்