×

ஆடிட்டர் வீட்டில் பணம், நகை திருட்டு

கோவை, மே 17: கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (45). ஆடிட்டரான இவர் சென்னிமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய், டிவி, வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மொபட் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல் துடியலூர் நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சம்பத் (58) என்பவர் வெளியூர் சென்று விட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்தார். இவரின் வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு 8 பவுன் தங்க நகை திருடப்பட்டது. இது தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்