×

நாகை நகராட்சி 16வது வார்டில் பாசிப்படர்ந்த குடிநீர் விநியோகம் சீரமைப்பு

நாகை, மே17: தினகரன் செய்தி எதிரொலியால் நாகையில் பாசிப்படர்ந்த குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு அதிகாரிகள் அதை சீர்செய்தனர். நாகை நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டில் சங்கரன்பிள்ளையார் கோயில் தெரு, மேலவாக்காங்கரை தெரு, சிவன்மடவாளகம், சிவன் மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றத்துடன் பாசிப்படர்ந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி கடந்த 14ம் தேதி வெளிவந்தது. இதன் எதிரொலியாக  பொறுப்பு ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகள் நடத்தினர். இதில் அந்த பகுதியில் வீடுகள் சீர் செய்தபோது குழி தோண்டியதில் குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் லேசாக உடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடைப்பில் கழிவு நீர் கலந்து பாசிப்படர்ந்த குடிநீர் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீர் செய்யப்பட்டது. மேலும் அங்கிருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு நேற்று முதல் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்பட்டது.

Tags : Nagapattinam 16th Ward ,
× RELATED நாகை நகராட்சி 16வது வார்டில்...