×

பெருந்துறை அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

பெருந்துறை, மே 17: பெருந்துறையில் ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 20 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை தோப்புபாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ). இவரது மனைவி காந்திமதி. ஓய்வுபெற்ற ஆசிரியை. இவரது மகன் அருண்குமார். இவர், நம்பூயூர் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவித்ரா. இவர்கள் அனைவரும் நேற்று காலை சிவகிரியில் உள்ள கோயில் கும்பாபிஷேகத்திற்கு சென்றனர்.

மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்திருந்தது. உள்ளே இருந்த 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் முக்கிய தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார்  வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : house ,jewelery ,VAO ,Perundurai 20 ,robbery ,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை