×

சுசீந்திரம் அருகே அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி

சுசீந்திரம், மே 17: சுசீந்திரம் அருகே அடுத்தடுத்து நடந்த விபத்துக்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுசீந்திரம் அருகே சாஸ்தாநகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (46). வடக்கு தாமரைகுளத்தை சேர்ந்த இவரது உறவினர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று அவரை உடல்நலம் விசாரித்து விட்டு ஐயப்பன் பைக்கில் புதிய 4 வழிச்சாலை வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவிலில் இருந்து தெற்கு கரும்பாட்டூர் பகுதியை சேர்ந்த தினேஷ் (35) என்பவரும் அவ்வழியாக ைபக்கில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென இரண்டு பைக்குகளும் ஒன்றோடொன்று மோதிக்ெகாண்டன. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள் ஐயப்பனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், தினேஷை நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், ஐயப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தெங்கம்புதூர் அருகே கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை (57). இவர் கீழகாட்டுவிளையில் சைக்கிளில் சென்றுக் ெகாண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்தவரை பொதுமக்கள் மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தங்கதுரை இறந்தார். இது குறித்து அவரது தம்பி கனகலிங்கம் சுசீந்திரம் போலீசில் புகார் கொடுத்தார். இதேப்போன்று பூதப்பாண்டியை அடுத்த தாழக்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (35). நான்கு வழிச்சாலை ஒப்பந்த நிறுவன ஊழியராக இருந்தார். இவர் கடந்த 8ம் தேதி இரவு பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

சுசீந்திரத்தை அடுத்த குலசேகரன்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் பைக் தடுமாறி கீழே விழுந்ததில் முத்துராஜ் படுகாயமடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துராஜ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த 3 சம்பவங்கள் குறித்தும் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,Susindram ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை