×

அரசு பஸ் மோதி காவலாளி பலி

கடையநல்லூர், மே 17: கடையநல்லூரை அடுத்த கருப்பாநதி அணைக்கட்டு அருகில் கலைமான் நகர் பளியர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48). இவர் அங்குள்ள தோட்டத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை குமந்தாபுரத்தில் இருந்து கடையநல்லூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்தார். அப்போது மதுரையிலிருந்து குற்றாலம் சென்ற அரசு பஸ் ராமச்சந்திரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த போலீசார் ராமச்சந்திரன் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவருக்கு மாற்றுத்திறனாளியான மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். கடையநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...