×

ராசிபுரத்தில் தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வு

ராசிபுரம், மே 17:  ராசிபுரத்தில், தனியார் பள்ளி பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 4 பஸ்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. மேலும்,  டிரைவர்களுக்கு, தீ தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ராசிபுரத்தில், நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், டிஎஸ்பி விஜயராகவன் மற்றும் போக்குவரத்து அலுவலர் சதாசிவம் ஆகியோர் தலைமையில், நேற்று 32 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 145 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் அவசர வழி கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி மற்றும் முறையான ஆவனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு வாகன பராமரிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல், தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக எவ்வாறு தீயை அணைக்க வேண்டும் என்பது குறித்து தீயணைப்பு துறையினர், செயல்விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வில், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத 4 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

Tags : Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து