×

தர்மபுரியில் மறுவாக்குப்பதிவு நடக்கும் 8 வாக்குச்சாவடிகளில் டிஐஜி நேரில் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டி, மே 17: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்கு சாவடிகளில், வருகிற 19ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஐய்யம்பட்டி, நத்தமேடு, ஜாலிபுதூர் ஆகிய வாக்குசாவடிகளில் முறைகேடு நடந்ததாக, திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடி மையங்களை, தர்மபுரி ஏடிஎஸ்பி சுஜாதா கடந்த வாரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நேற்று முன்தினம், சேலம் சரக டிஐஜி செந்தில்குமார், தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன், அரூர் டிஎஸ்பி செல்லபாண்டியன், கடத்தூர் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 8 வாக்கு சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பொம்மிடி போலீசாரிடம், எந்தெந்த பகுதிகளில் கேமரா அமைப்பது, எவ்வளவு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது போன்ற விவரங்களை கேட்டறிந்தார். ஆங்காங்கே சிசிடிவி கேமராவை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு டிஐஜி செந்தில்குமார் அறிவுறுத்தினார்.

Tags : DIG ,polling stations ,Dharmapuri ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...