×

கும்மிடிப்பூண்டி அருகே கலப்பட டீசல் விற்றவர் கைது: 500 லிட்டர் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள காயலான் கடைகளில் பதுக்கி கலப்பட டீசல் விற்றவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி புதுவாயல், பெருவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி பைபாஸ், எளாவூர், சாமிரெட்டி கண்டிகை, கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள காயலான் கடைகளில் திருட்டு பொருட்கள் வாங்குவதாக  கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத்துக்கு புகார் வந்தது. அவரது உதரவின்பேரில் சிப்காட் போலீசார் நேற்று அந்த பகுதிக்கு உட்பட்ட காயலான் கடைகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது கும்மிடிப்பூண்டி பைபாஸ் கோரிமேடு பகுதி கடையை சோதனை செய்தபோது ஒருவர் 500 லிட்டர் தண்ணீர், 50 லிட்டர் டீசல் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (50) என்பதும், டீசலுடன் தின்னர் கலந்து கடைக்கு விற்கப்பட்டதும் தெரிந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்தனர்.  இதுதொடர்பாக பூந்தமல்லி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரை என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Diesel seller ,Gummidippondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய பொது...