×

திருப்போரூரில் தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

திருப்போரூர்: திருப்போரூரில் தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் மேற்கு மாடவீதியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முத்தூட் நகைக்கடன் நிறுவனம் உள்ளது. இங்கு தினமும் காலை 9 மணிக்கு திறந்து மாலை 6 மணி வரை நகைக்கடன் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் நான்கு பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் இந்த நகைக்கடன் நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்தது. இதனால் அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து அவர்கள் வந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்வையிட்டனர். மின் கோளாறு அல்லது எலி வயரைக் கடித்ததால் அலாரம் ஒலித்தி
ருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த நிறுவனத்தில் அடிக்கடி அலாரம் ஒலிப்பதால் அதில் உள்ள கோளாறை உடனடியாக சரி செய்யுமாறு போலீசார் நிறுவன ஊழியர்களை எச்சரிக்கை செய்தனர்.

Tags : jewelery company ,
× RELATED லாவண்யா ஜூவல்லரியின் ரூ.34.11 கோடி சொத்து அமலாக்கத்துறை முடக்கம்