×

வத்திராயிருப்பு பகுதியில் பிஎஸ்என்எல் சேவை முடக்கம் வங்கி உள்ளிட்ட அலுவலக பணிகள் பாதிப்பு

வத்திராயிருப்பு, மே 16: வத்திராயிருப்பு பகுதியில் பிஎஸ்என்எல் சேவை முடக்கத்தால், வங்கி உள்ளிட்ட அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.  வத்திராயிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக பிஎஸ்என்எல் இணையதள சேவை சரியாக கிடைக்கவில்லை. இதனால், நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் எந்தவித அலுவலும் நடைபெறவில்லை. வங்கியில் நகைகளை அடகு வைக்க வந்தவர்கள், பல மணி நேரம் காத்திருந்தும் அடகு வைக்க முடியாமல் திரும்பச் சென்றனர். மேலும், செல்போன்களில் நெட் கிடைக்காததால் தகவல் பாிமாற்றங்கள் செய்ய முடியாமல் அவதிபட்டனர். வத்திராயிருப்பு பகுதியில் பிஎஸ்என்எல் சேவை சரியாக கிடைக்கவில்லை என பொதுவாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, வத்திராயிருப்பு பகுதியில் பிஎஸ்என்எல் இணையதள சேவை இடையூறு இன்றி கிடைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : BSNL ,area ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...