சிவகாசி. மே 16: சிவகாசி அருகே, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிவகாசி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதனைத் தொடர்ந்து சிவகாசி பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் சந்திராதேவி மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். இதில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த அண்ணா காலனியை சேர்ந்த பேச்சிமுத்து, சாமிபுரம் காலனியை சேர்ந்த சரவணகுமார், சர்க்கரை வாவா தெருவைச் சேர்ந்த நாசர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 ஆயிரத்து 844 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.