×

சித்தம் கிறுகிறுக்க... ரத்தம் துடிதுடிக்க...

‘‘காலையில எழுந்திருச்சு தொலையுதா இந்த சனியன்... 8.30 மணிக்கு வேன் வந்திரும். ஸ்கூலுக்கு போகணும்னு ஒரு அக்கறை இருக்கா இதுகளுக்கு...’’ என்று காலையிலே பள்ளி செல்லும் குழந்தைகளை எழுப்பும் 30 வயது தாய்மார்களுக்கு ‘பி.பி’ எனப்படும் ரத்த அழுத்த நோய் வந்து விடுகிறது என்றால் நம்ப முடிகிறதா? இந்தியாவில் 30 - 40 வயதிற்குள் உள்ளவர்களுக்கு 10ல் ஒருவருக்கும், 40-50 வயதிற்குட்பட்டவர்களுக்கு 8ல் ஒருவருக்கும், 50 வயதை கடந்தவர்களில் 5ல் ஒருவருக்கும் ரத்தம் அழுத்த நோய் இருப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. அதை நாம் முறையாக சோதித்து தெரிந்து கொள்வதில்லை. அவ்வளவுதான். ரத்த அழுத்தம்னு ஒண்ணு இருக்கிறது தெரியும். அது என்ன? எவ்வளவு இருந்தால் நல்லது. அதை எப்படி கட்டுப்படுத்துறது? இப்படி பல கேள்விகள் வருவதற்கு முன்பு, நாளை ரத்த அழுத்த தினம் (மே 17) என்பதை உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். சரி... வாங்க பேசலாம்... உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு ரத்த அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வை கடந்த 2005ல் இருந்து துவக்கியது. அந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் மே 17ம் தேதியை உலக ரத்த அழுத்த தினமாக அறிவித்தது. உங்கள் உடலில் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கும்போது 120/80 மி.மீ பாதரச அளவாக இருக்க வேண்டும். மருத்துவர்கள் 100/70 மிமீ முதல் 140/90 மிமீ வரை உள்ள ரத்த அழுத்தம் இயல்பானதுதான் என தெரிவிக்கின்றனர். இதை தாண்டும்போது ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவராக கருதப்படுகிறார்.

Tags : Siddha ,
× RELATED சித்த மருத்துவ பல்கலை கழகம் அமைக்கும்...