×

கலெக்டர் அலுவலகத்தில் நவீன கத்திகரிப்பு குடிநீர்

தேனி, மே 16: தேனி கலெக்டர் அலுவலக வராண்டாவில் நவீன சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் பொருத்தும் பணி நடந்து வருகிறது. தேனி கலெக்டர் அலுவலகத்தில் பிற்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துரை முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை சமூக நலத்துறை, சமூக பாதுகாப்பு துறை மாவட்ட வழங்கல்துறை, மாவட்ட கருவூலம், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. இவ்வலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், இவ் வலுவலகங்களில் பணிபுரிவோரும் வந்து செல்கின்றனர். மேலும், வாரந்தோறும் திங்கள் கிழமையன்று கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
கலெக்டர் அலுவலகம் வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் கடந்த திமுக ஆட்சியின்போது, கலெக்டர் அலுவலகத்தில் வராண்டாவில் கத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானியங்கி பம்ப் வைக்ககப்பட்டது. இதில் பொதுமக்களும், அரசு அலுவலர்களும் குடிநீர் பிடித்தன். இப்பம்பு அடிக்கடி பழுதுபட்டது. இதனால் நவீன சுத்திகரிப்புக்கான குழாயுடன் கூடிய இயந்திரம் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது, பழைய தானியங்கி பம்பு அகற்றப்பட்டு, நவீன குடிநீர் குழாயுடன் கூடிய இயந்திரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Tags : Office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...