×

கமுதி அருகே மின்னல் தாக்கி 13 ஆடுகள் பலி

கமுதி, மே 16: கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 13 ஆடுகள் பலியாகியது. கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சூறாவளிக் காற்றும் வீசியதில், ஏராளமான மரங்கள் ஒடிந்து விழுந்தன. இதில் கீழராமநதி கிராமத்தில் வயல்வெளி பகுதியில் நாகராஜ், சைவ கருப்பையா ஆகிய இருவரும் 60க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். இதில் மின்னல் தாக்கியதில் நாகராஜ்க்கு சொந்தமான 8 ஆடுகள், சைவகருப்பையாவுக்கு சொந்தமான 5 ஆடுகள் இறந்தன. சம்பவ இடத்திற்கு வந்து கமுதி வட்டாட்சியர் கல்யாணகுமார், வருவாய் ஆய்வாளர் கீதா ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் இப்பகுதியில் வீடுகள், வாழைத்தோப்புகள் சேதம் அடைந்துள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டனர்.

Tags : kills ,Kamudi ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பேரணி