×

ஏகாதசி விழா

நத்தம், மே 16: நத்தம் கோவிப்பட்டியில் உள்ளது பாமா ருக்ணி சமேத வேணுகோபால சுவாமி கோயில். இங்கு வைகாசி மாத ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் துளசி, மல்லிகை, ரோஜா, சம்மங்கி உள்ளிட்ட பல்வேறு மாலைகளை சுவாமிக்கு செலுத்தி தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கும், தேவியர்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

Tags : Ekadasi Festival ,
× RELATED ஸ்ரீ ரங்கம் கோயிலில் இன்று...