×

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை

கொடைக்கானல், மே 16: கொடைக்கானலில் கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் விதமாக பகலில் வெயில் மிதமாக தென்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் நேற்று மதியம் சுமார் ஒரு மணிநேரம் இடியுடன் கூடிய மழை பெய்தது. பின்னர் நின்ற மழை மீண்டும் கனமழையாக மாறி மாலை வரை சுமார் 2 மணிநேரம் கொட்டி தீர்த்தது. இதன்மூலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவிய சிறிது வெப்பமும் குளிர்ச்சியான சூழலாக மாறியது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர். கொடைக்கானல் கீழ்மலை, மேல்மலை பகுதியில் ஏற்கனவே விவசாய பணிகள் துவங்கி விட்டது. இந்நிலையில் நேற்று பெய்த கனமழை பயிர்களுக்கு சிறப்பானதாக அமைந்தது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...