×

மகளிர் ெதாழில்முனைவோர் சங்கம் சார்பில் கோடை கால பயிற்சி வகுப்புகள் துவக்கம் பங்கேற்று பயனடைய அழைப்பு

திருச்சி, மே 16:  மகளிர் தொழில்முனைவோர் சங்கம் சார்பில் நடத்தப்படும் கோடைகால பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் ெதாழில்முனைவோர் சங்கம் செயலாளர் மல்லிகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து தொழில்முனைவோர்களை உருவாக்க கோடைகால வகுப்புகளை அறிவித்துள்ளது. இதில் துணிப்பை பயிற்சி, பாக்குமட்டை தட்டு தயாரித்தல், சானிட்டரி நாப்கின் பயிற்சி, சணல் பை தயாரிப்பு பயிற்சி, மூலிகை அழகுசாதன பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, யோகா பயிற்சி, சிறுதானிய உணவு தயாரித்தல் பயிற்சி, பேக்கரி உணவு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. சுய தொழில் தொடர்பாக பயிற்சிக்கு பின் ஆர்வமுள்ளவர்களுக்கு தொடர் வழிகாட்டுதல் அளித்து வங்கி கடன், மான்ய திட்டங்கள் குறித்த ஆலோசனை வழங்கி தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.  மேலும் விவரங்களுக்கு சங்க அலுவலகம், செயிண்ட்பால்ஸ் காம்ப்ளக்ஸ் பாரதியார் சாலை உள்ள அலுவலகத்தில் ெதரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Women's Professional Association ,
× RELATED கோடைகால இலவச குத்துசண்டை பயிற்சி முகாம்