×

திருச்சியில் இரவில் பெய்த சாரல் மழை

திருச்சி, மே 16: திருச்சியில் நேற்றிரவு சாரல் மழை பெய்தது.  தமிழகத்தில் கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் வழக்கமாகவே அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த முறை சற்று முன்கூட்டியே மார்ச் மாதத்திலேயே வெயிலின் தாக்கம் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பல்வேறு மாவட்டங்களில் வெயில் தொடர்ந்து 105 டிகிரியை எட்டியது.   வெயிலின் தாக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் கடந்த 4ம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் மேலும் பொதுமக்களை வாட்ட துவங்கியது. இந்நிலையில் கடந்த 7, 8ம் தேதிகளில் திருச்சி பகுதியில் மாலையில் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடந்த ஒருவாரம் இடைவெளியில் மழையின் சூழலே தெரியாத அளவில் வெயில் கடுமையாக இருந்தது. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருச்சியில் சாரல் மழை பெய்தது. சில நிமிடங்களே பெய்த இந்த மழை சற்று குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது.

Tags : Trichy ,
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்