×

பாஸ்போர்ட்டில் போலி முத்திரை திருச்சி ஏர்போர்ட்டில் பஞ்சாப் வாலிபர் கைது

ஏர்போர்ட், மே 16:  பாஸ்போர்ட்டில் போலி முத்திரையிட்டு வந்த பஞ்சாப் மாநில வாலிபரை திருச்சி ஏர்போர்ட்டில்  போலீசார் கைது செய்தனர். திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த சுரேந்தர்குமார் என்பவரது மகன் ஹர்மந்தர் சிங்(22) என்பவர் போலியான இமிகிரேஷன் பிரிவு முத்திரை பாஸ்போர்ட்டில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் ஹர்மந்தர்சிங்கை கைது செய்து ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : teenager ,Pakistani ,Trichy Airport ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!