×

விசாக பெருவிழா சத்குணநாத கோயிலில் சுவாமி வீதியுலா

முத்துப்பேட்டை. மே 16: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கிராமத்தில் உள்ள சத்குணநாத கோயிலில் இந்தாண்டு வைகாசி விசாகப்பெருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. நேற்றிரவு மங்களநாயகிபுரம் கிராம மக்கள் சார்பில் காலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா, அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா வெகு சிறப்பாக நடந்தது. வீதியுலா கோவிலிலிருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிக்கு சென்று வந்தது. இதில் சுற்றுபகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Swami Vidyalaya ,
× RELATED கற்பகநாதர்குளம் பிச்சைக்கொடை...