×

நீடாமங்கலத்தில் செபஸ்தியார் ஆலய ஆண்டுவிழா

நீடாமங்கலம்,மே 16: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மண்டபத்தெருவில்  அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுவிழா தேர்பவனி நேற்று முன்தினம்  நடந்தது. ஆலயத்தில் கடந்த மாதம் 30ம் தேதி மாலை கொடி ஏற்றத்துடன் விழா  தொடங்கி கடந்த 13ம் தேதிவரை நவநாள் ஜெபம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து  நேற்றுமுன்தினம் இரவு பங்குதந்தை இருதயசாமி தேரை புனிதம் செய்ய மின் அலங்காரத்துடனும், வாண வேடிக்கையோடும் , கிளாரிநெட்  இன்னிசையோடும் புனித செபஸ்தியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி  நீடாமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகள்வழியாக சென்று வந்தது. நேற்று காலை  திருவிழா பாடல் கூட்டுத் திருப்பலி நடைபெற்று கொடி இறக்கப்பட்டது.  ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புனித செபஸ்தியார் ஆலய கிராம மக்கள்  செய்திருந்தனர்.

Tags : Sebastian Temple Anniversary ,
× RELATED முத்துப்பேட்டை அருகே தென்னங்கன்றுகளுக்கு தீ வைத்தவருக்கு கத்திக்குத்து