×

பாபநாசம் அருகே கூரை வீடு எரிந்து சாம்பல் பெண்ணுக்கு நிவாரணம்

பாபநாசம், மே 16: பாபநாசம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் கூரை வீடு எரிந்து சாம்பலானது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் அடுத்த நரசிங்கமங்களத்தை சேர்ந்தவர் ராணி. இவரது கூரை வீடு எதிர்பாராமல் தீப்பற்றி எரிந்தது.
இதையடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீவிபத்தில் கூரை வீட்டில்  இருந்த அத்யாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த தகவல் கிடைத்ததும் பாபநாசம் தாசில்தார் கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து ராணிக்கு ஆறுதல் கூறி வேட்டி, சேலை, 2 லிட்டர் மண்ணெண்ணெய், 10 கிலோ அரிசி, ரூ 5,000 வழங்கினார். துணை தாசில்தார் தர்மராஜ், மெலட்டூர் ஆர்ஐ கலையரசி, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags : roof house ,Papanasam ,
× RELATED அதிமுக வேட்பாளரை தடுத்துநிறுத்தி கரும்புவிவசாயிகள் வாக்குவாதம்..!!