×

விளையாட்டு மைய விடுதிகளில் சேர பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னையில் 21ம் தேதி நேர்முக தேர்வு

புதுக்கோட்டை, மே 16: முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். செனனையில் 21ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது. இதுகுறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி செயல்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு  மைய விடுதி செயல்பட்டு வருகின்றன.

இந்த முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கணையராக விளங்குவதற்கு 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மற்றம் 8ம் வகுப்புகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான தேர்வு வரும் 21ம்  தேதி, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. சிறுவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல் போட்டியும், சிறுமியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியிலும் தேர்வு நடக்கிறது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும்  ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் 2019-2020ம் ஆண்டுக்குரிய விண்ணப்ப படிவங்களை www.sdat.tn.gov.in எனும்  இணையதளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப  வேண்டும். மேலும் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் வரும் 21ம் தேதி காலை 8 மணிக்கு மாநில அளவிலான தேர்வு நடைபெறும்போது  நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : school students ,Chennai ,sports center hotels ,
× RELATED மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச்...