×

தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் திருச்சி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

இலுப்பூர், மே 16: அன்னவாசலில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை பிடித்து திருச்சி சீர்திருத்த பள்ளியில் போலீசார் அடைத்தனர். அன்னவாசலில் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் திருட்டு சம்பவம் நடந்தது. இதையடுத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன் தினம் அன்னவாசலில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுவன், அன்னவாசல் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டவன் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள அடையமழவராயன்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், 8 வகுப்பில் தேர்ச்சி பெறாததால் பள்ளிக்கு செல்லவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலை பகுதியில் பைக் திருடிய வழக்கில் தண்டனை பெற்று செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டு அங்கு ஐடிஐ படித்ததும், பின்னர் அங்கிருந்து தப்பி வந்து அன்னவாசல் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்து திருச்சி சீர்திருத்த பள்ளியில்  அன்னவால் போலீசார் அடைத்தனர்.


Tags : robbery ,Trichy Reform School ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...